மார்க்க கேள்வி பதில்கள்

👁Question no:141👁

Udal urupuhal thaanam alika islathil idam unda?

👁கேள்வி எண்:141👁

உடல் உறுப்பு தானம் அளிக்க இஸ்லாத்தில் இடமுண்டா?

❤பதில்❤

அல்லாஹ்தான் அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன். அவன் கொடுத்த ஒவ்வொன்றும் அமானிதம். இதில் சிந்திப்பவர்களுக்கு பலப்பல அத்தாட்சிகள் வைத்துள்ளான். அவன் படைத்த ஒவ்வொன்றும் வீணுக்காக படைக்கவில்லை.

இதுபோன்ற விஷயங்களிலிருந்து உறுப்புகளும் வீணாக படைக்கப்படவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். அதற்கு குறிப்பிட்ட தவணை இருப்பதால்தான் அதன் தவணை முடியும் காலம் இறந்த பின்பும் நீட்டிக்கப்படுகிறது.

எவர் மற்ற ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ்வைத்தவர் ஆவார். இஸ்லாம் அடுத்தவர் மீது இரக்கம் காட்ட சொல்லும் மார்க்கம் ஆகும். இத்தகைய ஆதாரங்களிலிருந்து நாம் உறுப்பு தானம் செய்வதை இஸ்லாம் ஆதரிக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆனால் உயிரோடு இருப்பவர்கள் உறுப்புகளை தானம் செய்வதற்காக தன்னை அழித்து கொள்வதை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்காது. அவரது உயிருக்கு ஊறு விளையுமானால் அதனை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. அல்லாஹ்வின் பாதையில் உதவ நாடுவோர் வரம்பு மீறி தன்னை அழித்து உதவ இஸ்லாம் கூறவில்லை.

இருப்பினும் ஒரு உறுப்பை தானம் செய்வதன் மூலம் அவருக்கு ஊனம் ஏற்படாமல் இருவரும் உயிரோடு இருப்பார் எனில் உறுப்பு தானம் தவறில்லை. ஆனால் இவர் தானம் செய்தால் உயிருக்கு ஏதேனும் பாதிப்பு வரும் என சந்தேகம் இருக்கும் நிலையில் அவ்வாறு செய்யக் கூடாது.

ஆனால் அல்லாஹ் அளித்த அமானிதத்தை பணத்திற்காகவோ,மருத்துவ கல்விக்காகவோ விலை பேசுவதற்கு நமக்கு உரிமை கிடையாது.

நபி(ஸல்) அவர்கள் மரணித்தவரின் உடல் எலும்பை முறிப்பது உயிருடன் இருப்பவரின் எலும்பை முறிப்பது போலாகும் என்று கூறியுள்ளார். எனவே உடலை சிதைக்காமல் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி மனிதாபிமான அடிப்படையில் கொடுப்பது இஸ்லாத்தில் கூடும்.

ஒரு சிலர் உடல் உறுப்புக்களை தானம் செய்தால் ஊனமாக எழுப்பப்படுவோம் என்று வாதிடுகிறார்கள். ஆனால் கண் இல்லாதவர்கள் குருடர்களாக எழுப்பப்பட மாட்டார்கள் மாறாக அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்தவர்கள் குருடர்களாக,செவிடர்களாக எழுப்பப்படுவர்.

இன்னும் சிலர் உடல் அல்லாஹ்விற்கு சொந்தமான ஒன்று அதனால் தானம் செய்யக்கூடாது என்று கூறுகின்றனர். ஆனால் உடல்,பொருள், உயிர் அனைத்தும் அவனுக்கு சொந்தமானது. செல்வத்தை தேவையுடோருக்கு கொடுப்பதை அல்லாஹ் வலியுறுத்தும் அடிப்படையில் இருந்து உறுப்பும் தேவையுடையவருக்கு கொடுக்கலாம். அதன் தவணை முடிந்தவுடன் அதுவும் மண்ணில் தான் சேரும் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை.

உலக விஷயத்தில் இது போன்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த முறை இருந்ததா? என்று கேட்கக் கூடாது. மாறாக இஸ்லாத்தின் சட்ட திட்டங்களுக்கு இவை எதிராக இருக்கின்றதா? என்று மட்டும் பார்க்க வேண்டும். நவீன முறைகள் இஸ்லாமியச் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக இல்லாவிட்டால் அவை அனுமதிக்கப்பட்டதாகி விடும்.

கண், கிட்னி, இரத்தம் போன்றவற்றை தானமாக கொடுத்து பிறரை வாழவைப்பதை தடை செய்யும் விதமாக குர்ஆன் ஹதீஸில் எந்த சான்றும் இடம் பெறவில்லை. மாறாக மனித உயிரை வாழச் செய்வது என்ற அடிப்படையில் இது ஒரு நல்லறமாகும்.

சிலர் சரியான மார்க்க அறிவு இல்லாமல் மனித உயிரைக் காக்கும் இது போன்ற உறுப்பு தானங்களை எதிர்த்து வருகின்றனர். இவர்களுக்கோ இவர்களின் உறவினர்களுக்கோ பிறருடைய உறுப்பைப் பொறுத்தினால் தான் வாழ முடியும் என்ற நிலை இருந்தால் அப்போது இவர்கள் உறுப்பு தானத்தை எதிர்க்க மாட்டார்கள். இந்த சூழ்நிலையில் அனைத்து மனிதனும் மன உறுத்தலின்றி இதை ஏற்றுக் கொள்வான்.

அதே நேரத்தில் உடல் முழுவதையும் தானம் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.  ஏனெனில் உடல் தானம் என்பது கண் தானத்தைப் போன்றதல்ல.  உடல் தானம் செய்யும் மனிதனின் உடலிலுள்ள பாகங்களை எடுத்து பிற மனிதர்களுக்குப் பொருத்துவதில்லை. 

மாறாக உடலின் ஒவ்வொரு பாகத்தையும் எடுத்து மருத்துவக் கல்வியின் பாடத்திற்காகவும் ஆய்வுக்காகவுமே பயன்படுத்தப் படுகின்றன.  கண் தானத்தின் போது கண்ணோ மற்ற உறுப்புகளோ சிதைக்கப்படுவதில்லை. இறந்தவரின் கண்ணை எடுத்து அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றது. ஆனால் உடல் தானம் செய்தவரின் உறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக சிதைக்கப்படுகின்றன. இதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

உடலைக் குளிப்பாட்டும் போது அவ்வுடலில் பல குறைபாடுகள் இருக்கலாம். உலகில் வாழும் போது அந்தக் குறைபாடுகளை அவர் மறைத்து வாழ்ந்திருக்கலாம். குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரை அல்லாஹ் நாற்பது தடவை மன்னிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இறந்த பின்னரும் ஒரு மனிதரின் வெட்கத்தலம் மறைத்து பாதுக்காக்கப்பட வேண்டும். ஆனால் உடல் தானம் செய்தால் அந்த உடலை மற்றவர்கள் அன்றாடம் நிர்வாணமாக்க் காணும் நிலை ஏற்படும்.

மருத்துவ படிப்புக்கு உடல் தேவைப்படும் என்ற காரணத்தால் இதை இஸ்லாம் அனுமதிக்காது. மனித உடல் போன்ற மாதிரிகளை வைத்து மருத்துவப் படிப்புக்கு பயன்படுத்த முடியும்.

எனவே, நாம் உயிருடன் இருக்கும்போதும்,இறந்த பின்பும் ஒரு உயிரை வாழவைக்கும் நோக்கில் உறுப்பு தானம் செய்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாகும்.

📚📖ஆதாரங்கள்

📗….. வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.(அல் குரான்/ 5:17)

📗

أَلَا إِنَّ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ قَدْ يَعْلَمُ مَا أَنتُمْ عَلَيْهِ وَيَوْمَ يُرْجَعُونَ إِلَيْهِ فَيُنَبِّئُهُم بِمَا عَمِلُوا ۗ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ  ﴿24:64﴾
24:64. வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை அறிந்து கொள்வீர்களாக! நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ அதை அவன் (நன்கு) அறிவான்; மேலும் அவனிடத்தில் அவர்கள் மீட்டப்படும் அந் நாளில் அவன், அவர்கள் (இம்மையில்) என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதையும் அவர்களுக்கு அறிவிப்பான் – மேலும், அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிபவன்.

📗2:29. அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்;

📗
أَلَمْ تَرَوْا أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَأَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهُ ظَاهِرَةً وَبَاطِنَةً ۗ وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَلَا هُدًى وَلَا كِتَابٍ مُّنِيرٍ  ﴿31:20﴾
31:20. நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும், உங்களுக்கு வசப்படுத்தி இருக்கிறான் என்பதையும்; இன்னும் தன் அருட் கொடைகளை உங்கள் மீது புறத்திலும், அகத்திலும் நிரம்பச் செய்திருக்கிறான் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆயினும், மக்களில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் போதிய கல்வியறிவில்லாமலும்; நேர்வழி இல்லாமலும், ஒளிமிக்க வேதமில்லாமலும் அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்கின்றனர்.

📗(5:2)….இன்னும் நன்மையிலும்; பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்…

📗
وَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا بَاطِلًا ۚ ذَٰلِكَ ظَنُّ الَّذِينَ كَفَرُوا ۚ فَوَيْلٌ لِّلَّذِينَ كَفَرُوا مِنَ النَّارِ  ﴿38:27﴾
38:27. மேலும், வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) காஃபிர்களின் எண்ணமாகும்; காஃபிர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் உண்டு.

📗
أَوَلَمْ يَتَفَكَّرُوا فِي أَنفُسِهِم ۗ مَّا خَلَقَ اللَّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا إِلَّا بِالْحَقِّ وَأَجَلٍ مُّسَمًّى ۗ وَإِنَّ كَثِيرًا مِّنَ النَّاسِ بِلِقَاءِ رَبِّهِمْ لَكَافِرُونَ  ﴿30:8﴾
30:8. அவர்கள் தங்களுக்குள்ளே (இது பற்றிச்) சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவற்றையும், உண்மையையும், குறிப்பட்ட தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை; எனினும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் தங்கள் இறைவன் சந்திப்பை நிராகரிக்கிறார்கள்.

📗
الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ  ﴿67:2﴾
67:2. உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.

📗
وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ ۛ وَأَحْسِنُوا ۛ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ  ﴿2:195﴾
2:195. அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.

📗17:36. எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்…

📗
وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى‏ 
“எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான்.
(அல்குர்ஆன் : 20:124)

📗மேலும் மறுமையில் நாம் எழுப்பப்படும் போது அனைத்து ஆண்களும் சுன்னத் செய்யப்படாதவர்களாகவே எழுப்பப்படுவோம் – புகாரி 3349, 3447, 4635, 4740, 6524

சுன்னத் மூலம்  அப்புறப்படுத்திய பகுதிகளையும் சேர்த்து இறைவன் எழுப்புவான் என்பது எதை உணர்த்துகிறது!!

📗
يَّوْمَ تَبْيَضُّ وُجُوْهٌ وَّتَسْوَدُّ وُجُوْهٌ   فَاَمَّا الَّذِيْنَ اسْوَدَّتْ وُجُوْهُهُمْ اَكَفَرْتُمْ بَعْدَ اِيْمَانِكُمْ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ‏ 
அந்த (மறுமை) நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கருத்தும் இருக்கும்; கருத்த முகங்களுடையோரைப் பார்த்து: நீங்கள் ஈமான் கொண்டபின் (நிராகரித்து) காஃபிர்களாகி விட்டீர்களா? (அப்படியானால்,) நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்” (என்று கூறப்படும்).
(அல்குர்ஆன் : 3:106)

📗உனக்கு சந்தேகமானவற்றை விட்டுவிடு,உனக்கு சந்தேகமற்ற உறுதியான விஷயத்தின்பால் சென்றுவிடு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரி)

📗9:111. (நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற அடிப்படையில் விலைக்கு வாங்கி கொண்டான்…..

📗பூமியில் உள்ளவர்கள் மீது இரக்கம் காட்டுவோருக்கு வானில் உள்ளவர்கள் இரக்கம் காட்டுவார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி)

நூற்கள்: புகாரி,அஹமது

📗3467. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்து விடும் நிலையில் இருந்தது. அப்போதுஇ பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் விபசாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனேஇ அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள்

*************************************

🍼Question no: 142🍼

Pen Kuzhandhaigalukkaana thaipall kodukkum wayadh enna?

🍼 கேள்வி எண்:142🍼

*பெண் குழந்தைகளுக்கு தாய்ப்பால் எத்தனை வயது வரை கொடுக்கலாம்?*

⚪பதில்⚪

    பால்குடி சட்டத்தை பொறுத்தவரை இஸ்லாத்தில் ஆண் குழந்தைகளுக்கு, பெண் குழந்தைகளுக்கு என்று தனித் தனி சட்டம் கிடையாது.

குழந்த்தைகளுக்கு முழுமையாக *இரண்டு ஆண்டுகள்*பால் கொடுக்க வேண்டும்.

அல்லாஹ் தன் திருக்குர்ஆனில் வசனம் 31:14 ல் பால்குடியை மறப்பது இரண்டு ஆண்டுகள் என்றும், 46:15 ல் சுமப்பதும்,பால்குடி மறப்பதும் சேர்த்து 30 மாதங்கள் என கூறியுள்ளான்.

இந்த கணக்குப்படி கர்ப்பகாலம் 10 மாதத்தை கழிதால் பால்குடி மறத்தல் 20 மாதங்கள் தான் ஆகின்றன.

பால்குடி மறக்கடிக்கப்படும் காலம் இரண்டு ஆண்டுகள் என்பதும் 20 மாதங்கள் என்பதும் முரணாக தோன்றலாம்.

ஆனால் கருவில் சுமார் 10 மாதங்கள் குழந்தை இருந்தாலும் அது மனிதன் என்ற தன்மையை பெற நான்கு மாதங்கள் ஆகின்றன.
எனவே மனித நிலையை அடைந்த காலத்திலிருந்து கணக்கிட்டால் சுமார் ஆறுமாத காலமும்,  இரண்டு ஆண்டுகளும் சேர்த்து 30 மாதங்கள் பூர்த்தியாகிறது. எனவே இவ்வசனங்களில் கூறப்பட்டவை ஒன்றுக்கொன்று முரணல்ல.

இதிலிருந்து ஆண் குழந்தையாக இருந்தாலும்,பெண் குழந்தைதாக இருந்தாலும் பாலூட்டும் காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

📚📖ஆதாரங்கள்

📓
وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَىٰ وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ  ﴿31:14﴾
31:14. நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”

📓

وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا ۖ حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا ۖ وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا ۚ حَتَّىٰ إِذَا بَلَغَ أَشُدَّهُ وَبَلَغَ أَرْبَعِينَ سَنَةً قَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَىٰ وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي ۖ إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ  ﴿46:15﴾
46:15. மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.

📓233. (தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்….

📓பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையைச் சதைத்துண்டாக ஆக்கினோம். சதைத்துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். (திருக்குர்ஆன் 23:14) 

××××××××××××××××××××××××××××××

🌺Question: 143🌺

Gay(aravanigal) yaar.?aanaa?pen ah ?alladhu avargal sollikolvadhu pol oru thani gender ah?alladhu oru psychological problem ah? Islaam idhai patri enna solgiradhu

🌺 *அரவாணிகள் என்பவர்கள் யார்? ஆணா? பெண்ணா? அல்லது ஒரு தனி பாலினமா? அல்லது மனநோய் உள்ளவர்களா? மார்க்கம் இவர்களை பற்றி கூறுவது என்ன?*

🍃பதில்🍃

  இறைவன் படைப்பில் ஆண் பெண் என்ற இரு இனங்கள் உள்ளன. ஆண் இனத்துக்கும் பெண் இனத்துக்கும் உடல் தோற்றத்தில் மட்டுமின்றி குணம் நடத்தை ஆகிய விஷயங்களிலும் வேறுபாடு உள்ளது.

ஆனால் அரவாணிகள் என்போர் இதிலிருந்து மாறுபடுகின்றனர். ஆண்களைப் போன்ற உடல் தோற்றம் கொண்டிருந்தாலும் அவர்களின் உணர்வுகள் குணாதிசங்கள் நடத்தைகள் ஆகியவை அனைத்தும் பெண்களைப் போன்று அமைந்திருக்கும். அதாவது உடல் தோற்றத்தைக் கவனித்தால் இவர்கள் ஆண்களாகவும் குணாதிசியங்களைக் கவனித்தால் இவர்கள் பெண்களாகவும் இருக்கின்றனர்.

இது இவர்களின் உடலில் ஏற்பட்ட பாதிப்பாகும். இந்தப் பாதிப்பு மனிதனின் சுய முயற்சி இல்லாமல் இறைவனுடைய சோதனையாக சில நேரங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதுண்டு.

இதைப் பொறுத்துக் கொண்டால் அதற்குரிய கூலியை இறைவன் நிச்சயம் கொடுப்பான். மேலும் மருத்துவம் செய்து இந்தக் குறையைச் சீர் செய்ய முயற்சிக்கலாம். சிகிச்சைக்குப் பின் ஆண்களுக்குரிய அனைத்து அம்சங்களும் இவர்களுக்கு கிடைத்துவிடும் என்று மருத்துவர் கூறினால் இந்த மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்.

இவர்கள் ஆண்களைப் போன்றே ஆடைகளையும் நடத்தைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் இன்றைக்கு அரவாணிகள் நவீன கருவிகளையும் மருந்துகைளையும் பயன்படுத்தி தங்களை பெண்களாக மாற்றிக் கொள்கின்றனர். செயற்கையாக பெண் போன்ற உடலமைப்பை உருவாக்கிக் கொள்கின்றனர். இதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. இறைவனுடைய படைப்பில் மாற்றம் செய்வதை அல்லாஹ் தடை செய்துள்ளான்.

அதேபோல் பெண் உடலமைப்பை கொண்டவர்கள் ஆணின் குணாதிசியத்தை பெற்றிருப்பார்கள். இவர்களுக்கும் சிகிச்சை அளிதால் குணமாகும் எனும் சூழ்நிலையில் சரி செய்ய முயற்சிக்கலாம்.

ஆனால் சரிசெய்ய முடியாத சூழ்நிலையில் அவர்களின் உருவத்தின் அமைப்பை கொண்டு அவர்கள் அதுவாகத்தான் பாவிக்க வேண்டும்.

எதிர்பாலினமாக ஒப்பனை செய்வது இஸ்லாத்தில் தடை செய்யப் பட்டுள்ளது.
ஆண் தோற்றம் கொண்டவர்கள் பெண்களாக மாறாமல் ஆணின் சட்டத்தையும்,பெண் தோற்றம் கொண்வர்கள் பெண்ணின் சட்டத்தையும் மேற்கொள்ள வேண்டும்.

மாறாக உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தன்னை ஆண் அரவாணிகள் பெண்கள் போன்றும், பெண் அரவாணிகள் ஆண்கள் போன்றும் வேடமிட கூடாதும்.

இது ஒரு மிகப்பெரிய சோதனையாயினும் பொறுமையை மேற்கொள்ள வேண்டும்.

இது அவர்களுக்கு உடலும்,மனமும் பாதிக்கக்கூடிய ஒரு விஷயம்.
இஸ்லாமியர்களாகிய நாம் அவர்களை ஒதுக்காது, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
இல்லையெனில் அவர்கள் தவறான பல வழிகளை தேர்ந்தெடுக்கக் கூடும்.

தீய நடத்தை கொண்ட அரவாணிகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

📚📖ஆதாரங்கள்

📕அவர்களை வழி கெடுப்பேன்;அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்;அவர்களுக்குக் கட்டளையிடுவேன்;அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளை யிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்” (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.

அல்குர்ஆன் (4 : 119)

📕நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள் .

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி (5885)

📕நபி (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும்,ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும், “அவர்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருவரை வெளியேற்றினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஒருவரைரை வெளியேற்றினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர-லி

நூல் : புகாரி (5886)

📕என்னிடம் (பெண்னைப் போன்று நடந்து கொள்ளும்) “அரவாணி ஒருவர் அமர்ந்திருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த “அரவாணி, (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவிடம், “அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணமுடித்துக் கொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும்,பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள்” என்று சொல்வதை நான் செவியுற்றேன். (இதைக் கேட்ட) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இந்த அரவாணிகள் (பெண்களாகிய) உங்களிடம் ஒரு போதும் வர (அனுமதிக்க)க் கூடாது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி) 

நூல் : புகாரி (4324)

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••

🕌Question no:144🕌

  Palliyil irandaam jamaathil thozhudhaal mudhal jamaathil thozhudha nanmai kidaikkumaa?

🕌கேள்வி எண்:144🕌

*பள்ளியில் இரண்டாம் ஜமாத்தில் தொழுதால் முதல் ஜமாத்தில் கிடைக்கும் நன்மை கிடைக்குமா?*

🌟பதில்🌟
   
  தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவதுதான் சிறப்பு என நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்துயுள்ளார்கள்.
எனவே,நாம் முதல் ஜமாத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஆனாலும் தவிர்க்க இயலாத சூழ்நிலையில் தொழுகை தவறவிடப்பட்டால் தனியாக தொழுவதைவிட ஜமாத்தாக தொழுவதற்கு நன்மை ஆதலால் இரண்டாம் ஜமாத் தொழுது கொள்ளலாம்.

ஆனாலும் அதைவிட மிக மிக சிறந்தது தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது.

பிறகுள்ள ஜமாத்தை காட்டிலும் அதன் நேரத்தில் தொழுவதுதான் சிறந்தது.
அது அல்லாஹ்விற்கு மிக விருப்பமான செயலாதலால் அதற்கு முக்கிதத்துவம் அளிக்க வேண்டும்.

அல்லாஹ் நம் உள்ளத்தை நன்கறிபவன். நம்முடைய சூழ்நிலை பொறுத்து இவ்வாறு தொழ நேரிட்டால் அல்லாஹ் நாடினால்
இரண்டாம் ஜமாத்தில் தொழும் தொழுகைக்கும் முதல் ஜமாத்தில் தொழுத நன்மை கிடைக்கும்.

📚📖ஆதாரங்கள்

📓527. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோதுஇ ”தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்” என்று பதில் கூறினார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். ”பெற்றோருக்கு நன்மை செய்தல்” என்றார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். ”இறைவழியில் அறப்போர் புரிதல்” என்றனர். எனக்கு இவற்றை நபி(ஸல்) அவர்கள் அறிவித்தனர். (கேள்வியை) மேலும் நான் அதிகப்படுத்தியிருந்தால் நபி(ஸல்) அவர்களும் மேலும் சொல்லியிருப்பார்கள்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 9. தொழுகை நேரங்கள்

📓
654.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவதன் சிறப்பை மக்கள் அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுப்ஹ் தொழுகையிலும் அதமா(இஷா)த் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவர்.”
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 10. பாங்கு

📓615.  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர். தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதிலுள்ள நன்மையை அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுபுஹ் தொழுகையிலும் இஷா (அதமா)த் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்.”
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 10. பாங்கு

📓நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதை விட இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும்

அறிவிப்பவர் : அபூ ஹ‚ரைரா (ரலி ) நூல் : முஸ்லிம் (1147)

📓நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது தனியாகத் தொழுவதை விட இருபத்தேழு மடங்கு அதிகச் சிறப்புடையதாகும்

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)  நூல் : முஸ்லிம் (1151)

📓நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக்கூடியவர் யார்?என்று கேட்டனர். ஒரு மனிதர் முன்வந்தார்.  அவருடன் வந்த மனிதர் சேர்ந்து தொழுதார்

அறிவிப்பவர் அபூ ஸயீத் (ரலி) நூல் திர்மிதி (204)  அபூதாவூத் 487

📓அனஸ் (ரலி) ஒரு பள்ளிவாசலுக்கு வந்த போது அங்கே தொழுகை முடிந்து விட்டது. உடனே பாங்கும் இகாமத்தும் சொல்லி ஜமாஅத்தாகத் தொழுகையை நிறைவேற்றினார்கள்.

புகாரி பாகம் 1 பக்கம் 505

📓நபித்தோழர்கள் மற்றும் அதற்கடுத்த தலைமுறையினரில் அநேக அறிஞர்களின் கூற்றும் இதுவே. ஜமாஅத் தொழுகை நடந்து முடிந்து பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழுவதில் தவறில்லை என்று கூறுகின்றனர். இமாம் அஹ்மத்,இஸ்ஹாக் ஆகியோரும் இவ்வாறே கூறுகின்றனர். (திர்மிதி)
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

🍎Question no: 145🍎

Mathavidai kalathil Qur’an othalama?

🍎கேள்வி எண்: 145🍎

மாதவிடாய் காலத்தில் குரான் ஓதலாமா?

☘பதில்☘

   மாதவிடாய் காலத்தில் நோன்பு வைப்பது, தொழுவது, உடலுறவு கொள்ளுவது, தவாப் செய்வது போன்றவை செய்யக்கூடாது என இஸ்லாம் தெளிவாக கூறியுள்ளது.

இது தவிர ஏனைய செயல்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டதாகும். குரான் ஓதுவதற்க்கு எந்த தடையும் கிடையாது. அப்படி கூடாது எனில் நிச்சயமாக ஏதேனும் ஒரு சந்தர்பத்தில் நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பார்கள்.

பொதுவாக இவ்வாறு கூறுபவர்கள் கீழ்காணும் வசனத்தைத்தான் காட்டுவார்கள். அதன் பொருளை அறிந்தால் இவ்வாறு கூறமாட்டர்கள்.

தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள்.
அல்குர்ஆன் (56 : 79)

குளிப்புக் கடமையானவர்கள் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது. ஓதக் கூடாது என்பதற்கு வலுவான ஆதாரமாக இந்த வசனத்தை மாற்றுக் கருத்து உடையவர்கள் எடுத்து வைக்கின்றனர். இந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் திருக்குர்ஆனைத் தூய்மையற்ற நிலையில் உள்ள மாதவிடாய் ஏற்பட்டவர்கள் தொடக்கூடாது. ஓதக்கூடாது என்று தான் முடிவு செய்வார்கள்.

ஆனால் இந்த வசனத்தின் முந்தைய வசனங்களையும் இது போன்று அமைந்த மற்ற வசனங்களையும்  திருக்குர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு எவ்வாறு இறக்கப்பட்டது என்பதையும் விளங்கினால் இவர்களின் கருத்து முற்றிலும் தவறானது என்பதை விளங்கலாம்.

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள தூய்மையானவர்கள் என்றால் யார்?தொடமாட்டார்கள் என்றால் எதை?என்பதை முதலில் காண்போம்.

நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. ஒலி வடிவில் தான் அருளப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்கள் மனதில் பதிவு செய்து கொள்வார்கள் என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆன் எழுத்து வடிவில் இறக்கப்படவில்லை எனும் போது தொடுதல் என்ற கேள்வியே எழாது. தொடும் விதத்தில் திருக்குர்ஆன் இறக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்தக் குர்ஆனை தூய்மையானவர்களைத் தவிர யாரும் தொடமாட்டார்கள் என்று கூற முடியும்.

இந்த அடிப்படையில் 56 : 79 வசனத்தில் கூறப்பட்ட தொடுதல் என்பது நமது கையில் உள்ள எழுத்து வடிவிலான குர்ஆனைக் குறிக்காது என்பதை விளங்கலாம். மேலும் இக்கருத்தை வலுவூட்டும் வகையில் இதன் முந்தைய வசனங்கள் அமைந்துள்ளன.

இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும். தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள். அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது. 
அல்குர்ஆன் (56 : 77. 79)

56 : 79 வசனத்தின் முந்தைய இரண்டு வசனங்களையும் படிக்கும் போது ஒரு பேருண்மை நமக்கு விளங்கும்.  இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆன் என்று அல்லாஹ் கூறுகிறான். அடுத்த வசனத்தில் தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள் என்று கூறுகிறான்.

இப்போது அதை என்ற சொல் நம் கையில் இருக்கும் எழுத்து வடிவிலான திருக்குர்ஆனைப் பற்றிப் பேசவில்லை. பாதுகாக்கப்பட்ட ஏட்டில் (லவ்ஹுல் மஹ்ஃபூலில்) உள்ள திருக்குர்ஆனைப் பற்றித் தான் பேசுகின்றது என்ற உண்மை தெளிவாகிறது.

✒தூய்மையில்லாதவர்கள் திருக்குர்ஆனைத் தொடக்கூடாது. ஓதக்கூடாது என்றக் கருத்தில் சில ஹதீஸ்கள் வருகிறது. அவையனைத்தும் ஆதாரமற்றவையாகும்.

உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் அவர்களின் சகோதரி அவர்களை நோக்கி, ”நீங்கள் அசுத்தமாக இருக்கின்றீர்கள்.  தூய்மையானவர்களைத் தவிர இதை எவரும் தொடக் கூடாது” என்று கூறினார்கள் என்ற செய்தி முஸ்னத் பஸ்ஸார் என்ற நூ­ல் 279 வது ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ள உஸாமன் பின் ஸைத் என்பார் பலவீனமானவர் என்று மஜ்மவுஸ்ஸவாயித் என்ற நூலில் ஹைஸமீ குறிப்பிடுகின்றார்.

இதே அறிவிப்பு பைஹகீயிலும் இடம் பெற்றுள்ளது.  இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரானகாஸிம் பின் உஸ்மான் அல்பஸரீ என்பவர் பலவீனமானவர் ஆவார். இவரது ஹதீஸ் பின்பற்றக் கூடியதல்ல என்று இப்னு ஹஜர் அவர்கள் ஸிஸானுல் மீஸானில் குறிப்பிடுகின்றார்கள்.

ஒரு வாதத்திற்கு இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது என்று வைத்துக் கொண்டாலும் இதன் அடிப்படையில் தூய்மையற்றவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது என்று வாதிட முடியாது.  ஏனெனில் இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவோ, அல்லது அவர்கள் இதை அங்கீகரித்ததாகவோ இதில் குறிப்பிடப்படவில்லை.  உமர் (ரலி) அவர்களது சகோதரியின் சொந்தக் கருத்தாகவே இடம் பெற்றுள்ளது.  எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

எனவே, *மாதவிடாய் காலங்களில் குரான் ஓதுவதற்க்கு எந்த ஒரு தடை கிடையாது*

நபி (ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத ஒரு மன்னருக்கு’பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்’மற்றும் 3:64 ஆகிய குர்ஆன் வசனங்களை எழுதி அனுப்பியுள்ளார்கள்.  தூய்மையற்றவர்கள் குர்ஆனைத் தொடக்கூடாது என்றிருந்தால் மாற்று மதத்தில் உள்ளவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எழுதிக்கொடுத்திருக்க மாட்டார்கள்.

எனவே குர்ஆனை எந்த நிலையில் வேண்டுமானாலும் தொடலாம். ஓதலாம்.

📚📖ஆதாரங்கள்

📕294. ”நாங்கள் ஹஜ் செய்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். ”ஸரிஃப்” என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள்இ நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்துஇ ”உனக்கு என்ன? மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நான் ”ஆம்!” என்றேன். ”இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஅபதுல்லாஹ்வைத் வலம்வருவதைத் தவிர ஹாஜிகள் செய்கிற மற்ற அனைத்தையும் நீ செய்து கொள்” என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியருக்காக மாட்டைக் ”குர்பானி” கொடுத்தார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 6. மாதவிடாய்

📕297. ”எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 6. மாதவிடாய்

📕1951. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா? அதுதான் மார்க்கத்தில் அவளுக்குள்ள குறைபாடாகும்.”
இதை அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 30. நோன்பு

************************************
🕌Question no: 146🕌

   Nonbu adhaan aarbikkimbodhu thirakka venduma? alladhu adhaan mudiyumbodhu thirakka venduma?
Adhaan sollumbodhu aadu,maadu yenaiya aindharivu jeevangal adhaanukku mariyadhai koduthu saapiduvadhai niruthum endra seudhi unmaiya?

🕌கேள்வி எண்: 146🕌
நோன்பு திறக்கும் போது, இப்போ அதான் சொல்ல ஆரம்பிக்கும் போது திறக்கனுமா.??
அல்லது அதான் முழுமையாக முடிந்த பிறகு தான் திறக்கனுமா.!
எது சரி.?இது நிறையப் பேரின் சந்தேகம்.
*** அதான் சொல்லும் போது ஆடு,மாடு ஏனைய ஐஅறிவு ஜீவன்களே சாப்பிடுரத நிப்பாட்டு மாம்.
அதானுக்கு மரியாதை வெக்குமாம்.இது உண்மையா.!

🕌பதில்🕌

 
நோன்பு தொடங்குவதற்கோ,நோன்பு திறப்பதற்கோ நாம் அதானை பார்க்க வேண்டிய அவசியமில்லை.
சூரியன் உதிக்கும், மறையும் நேரத்தை பார்த்தால் போதுமானது. நம் நோன்பு முழுமை பெற்றுவிடும்.

நோன்பு தொடங்குவதற்கு கருப்பு நூலிலிருந்து வெள்ளை நூல் தெரியும் வரை சஹர் செய்யலாம் என்றும்,
நோன்பு திறப்பதற்கு இரவு வரை.. என்று தெளிவாக அல்லாஹ் தன் திருக்குரானில் கூறியுள்ளான்.

சூரியன் மறையும் நேரம் நோன்பு திறக்க வேண்டும்.
*நோன்பு திறப்பதை முற்படுத்த வேண்டும்* எனும் அடிப்படையில் சூரியன் மறையும் நேரத்தை பார்த்தால் போதுமானது.

சில பள்ளிகளில் சூரியன் மறைந்து சில நிமிடம் கழித்துத்தான் அதான் சொல்லுவார்கள்.
சில பள்ளிகளில் சரியாக மறையும் நேரத்தில் அதான் சொல்லுவார்கள்.

அப்படி,சரியான நேரத்தில் அதான் ஒலித்தால் அதான் சொல்லும் ஆரம்ப நேரத்தில் நோன்பு திறக்க வேண்டும்.
முடியும் வரை காத்திருக்கத் தேவையில்லை.

அதான் சொல்லும்போது ஐஅறிவு ஜீவிகள் அதானுக்கு மரியாதை கொடுத்து சாப்பிடுவதை நிப்பாட்டும் என்ற செய்தி *ஆதாரமற்றது*

📚📖ஆதாரங்கள்:

 📙   ‘….நீங்கள் இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதைக் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்’ என்று தமது விரலால் கிழக்கே சுட்டிக் காட்டி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃப் (ரலி), நூல்: புகாரி 1956)

📙’பகல் பின்னோக்கிச் சென்று, இரவு முன்னோக்கி வந்து சூரியனும் மறைந்து விட்டால் நீ நோன்பு திறப்பாய்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி), திர்மிதி 634)

📙    சூரியன் மறைந்து இரவின் இருள் படர ஆரம்பமாவது தான் நோன்பு திறக்கும் நேரமாகும். அதாவது மஃரிப் நேரத்தின் ஆரம்பம் தான் நோன்பு திறக்கும் நேரமாகும்.  

 📙   ‘விரைந்து நோன்பு திறக்கும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருக்கிறார்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), புகாரி 1957, முஸ்லிம், திர்மிதி 635, இப்னுமாஜா 1697)

📙    மற்றொரு அறிவிப்பில், ‘யூதர்கள் தான் நோன்பு திறப்பதை தாமதிப்பார்கள்’ என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (இப்னுமாஜா 1698)

  ✒  நோன்பு திறப்பதற்கான நேரத்தை அடைந்து விட்டால் உடனே நோன்பை திறந்து விட வேண்டும், தாமதிக்கக் கூடாது என்பது தான் இதன் கருத்தாகும்.

📙2:187 ….. இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்; பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்…

*__________________________________*

🌺Question no:147🌺

    Allah aadham(alai) avargalai than thotrathil padaithulladhaaga nabi(sal) avargal therivithullaargal.,Idhai patri vilakkavum

🌺கேள்வி எண்:147🌺

அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை தன்னுடைய தோற்றத்தில் படைத்துள்ளதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தெரிவித்துள்ளார்கள்.விளக்கவும்

📚📖 ஆதாரங்கள்

📕
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதமை தன்னுடைய உருவத்தில் படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. அவர்களைப் படைத்தபோது, “நீங்கள் சென்று, அங்கு அமர்ந்துகொண்டிருக்கும் வானவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அதுதான் உங்களது முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்” என்று இறைவன் சொன்னான். அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), “அஸ்ஸலாமு அலைக்கும்” (உங்களுக்கு சாந்தி நிலவட்டும்) என்று (முகமன்) சொன்னார்கள். “சாந்தியும் இறைவனின் கருணையும் (உங்கள் மீது நிலவட்டும்)” என்று வானவர்கள் பதில் கூறினார்கள். அவர்கள் (தங்கள் பதி-ல்) “இறைவனின் கருணையும்’ என்பதை அதிகப்படியாகச் சொன்னார்கள். ஆகவே, (மறுமை நாளில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம் (அலை) அவர்களின் உருவத்தில்தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர்கüன் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப்) படைப்புகள் (உருவத்திலும் அழகிலும்) குறைந்துகொண்டே வருகின்றன.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் புகாரி 6227

📕ஆதம் நபியை அல்லாஹ் தன் சாயலில் படைத்தான் என நபியவர்கள் கூறியுள்ளார்கள். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தால் தான் இப்படி சொல்லி இருக்க முடியும் என்ற அவசியம் இல்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி அறிவித்துக் கொடுத்தால் அதனடிப்படையில் இதைச் சொல்ல முடியும்.

அல்லாஹ்வை நான் உட்பட யாரும் பார்த்ததில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) சொல்லி இருப்பதால் அல்லாஹ்வைப் பார்த்துவிட்டு இப்படி கூறினார்கள் என்று கருத முடியாது.

இதன் மூலம் அல்லாஹ்வின் தோற்றமும் ஆதம் அலை அவர்களின் தோற்றமும் நூறு சதவிகிதம் ஒன்று என புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் இறைவனை போன்று யாரும் கிடையாது, அவனுக்கு எந்த வகையிலும் ஒப்புமை இல்லை என குர்ஆன் சொல்கிறது.

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

📕
فَاطِرُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا وَمِنَ الْأَنْعَامِ أَزْوَاجًا ۖ يَذْرَؤُكُمْ فِيهِ ۚ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ ۖ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ  ﴿42:11﴾
42:11. வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்.

📕
رَّبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا فَاعْبُدْهُ وَاصْطَبِرْ لِعِبَادَتِهِ ۚ هَلْ تَعْلَمُ لَهُ سَمِيًّا  ﴿19:65﴾
19:65. “(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவை இரண்டிற்குமிடையே உள்ள வற்றிற்கும் இறைவனாக இருக்கின்றான். ஆகையினால் அவ(ன் ஒருவ)னையே வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில் (கஷ்டங்களையேற்றுப்) பொறுமையுடன் இருப்பீராக! (பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா?”  

📕
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ  ﴿112:4﴾
112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

எனினும் முகத்தில் அறைவதை இஸ்லாம் தடைசெய்கிறது

📕5092. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், முகத்தில் அறைவதைத் தவிர்க்கட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும்

~~~~~~~~~~~~~~~~~~~
=======================

💀Question no: 148💀

    En veetarugil ulla pennukku peai pidithirukiradhu endru solgiraargal. Andha pen iravellaam satham idugiraal. Peai pisaasu irukiradhaa? Peai enbadhu unmaiya? Vilakkam tharauvm.

💀கேள்வி எண்: 148💀

*என் பக்கத்து வீட்டில் ஒரு பெண்ணுக்கு பேய் பிடித்து இருக்கு என்று சொல்கிறார்கள்… அந்த பெண் இரவெல்லாம் பயங்கரமாக சத்தம் போடுது. பேய் பிசாசு இருக்கிறதா?  பேய் என்பது உண்மையா???  விளக்கம் தரவும்….*

👹பதில்👹

இஸ்லாத்தை பொறுத்தவரை பேய்,பிசாசு என்பதெல்லாம் மூடநம்பிக்கை
ஆகும்.

பேய் பற்றி கூறுபவர்கள்  பேய்,பிசாசு,ஆவி என்பதெல்லாம் என்ன என்று கூறுகிறார்கள்?
இறந்த ஒருவரின் உடலிலுள்ள ஆவி இன்னொருவர் மேல் பிடிப்பது.

இஸ்லாம் மார்க்கத்தில் இறந்த ஒருவரின் உயிர் அல்லாஹ்விடம்தான் சென்றடைகிறது என்று தெளிவாக பல ஆதாரங்களுடன் சந்தேகமின்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் அந்த ஆவி எப்படி இன்னொரு உடலில் போக முடியும்? சிந்தித்து பார்க்க வேண்டும்.

நம் மார்க்கத்தில் நம் கண்களுக்கு புலப்படாமல் இருப்பது ஷைத்தான்களும்,நல்ல ஜின்கள், கெட்ட ஜின்கள்,மலக்குமார்கள் ஆகியவை.

இவற்றில் ஷைத்தான்களும்,கெட்ட ஜின்களும் நம்மை வழிகெடுப்பவைகள். ஆனால் இவைகள் ஈமான் கொண்டவர்களை ஒவ்வொரு செயலிலும் வழிகெடுக்குமே தவிர வெளிப்படையாக உடலினுள் புகுந்து நம்மை சத்தம் போடுவது,கொல்வது,பயங்கர அகோர விஷயங்கள் செய்வது…போன்ற செயல்கள் செய்யாது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு ஷைத்தானும்,ஒரு வானவரும் உள்ளது உண்மைதான்.

ஷைத்தான் தீய காரியம் செய்யுமாறு தூண்டுகிறான். அந்த மனிதன் சுய சிந்தனையுடன், தன்னுணர்வுடன் அவனுக்குக் கட்டுப்படுகின்றான். வானவர் நன்மைகளைச் செய்யுமாறு தூண்டுகிறார். அந்த மனிதன் சுய சிந்தனையுடனும் விருப்பத்துடனும் அதனைச் செய்கிறான்.

இதிலிருந்து ஷைத்தானுடைய அதிகபட்ச ஆதிக்கம் என்னவென்பது தெளிவாகவே தெரிகின்றது. மனிதர்களைத் தவறான பாதையில் நடக்கத் தூண்டி அதைச் சரியானது என நம்ப வைப்பது தான் ஷைத்தானுடைய அதிகபட்சமான ஆதிக்கமாகும்.

இது மறைமுகமாக நம்மை வழிகெடுக்கக்கூடியவை.
இது ஒரு தீய சக்தி.

இந்த ஷைத்தானை அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு கோரி எளிதாக வெல்லலாம்.

ஆனால் *பேய்,பிசாசு போன்றவைகள் இல்லாத ஒரு கற்பனை ஆகும்*

ஒருவர் மரணித்துவிட்டால் நமக்கும் அவர்களுக்குமிடையே அல்லாஹ் ஒரு திரையை ஏற்படுத்தி விடுவான்.

அப்படி பேய் இருக்குமெனில் நம் முன்னால் இறந்த பல கோடி ஆவிகள் பலரது உடலில் குடிகொண்டு தான் செய்ய நினைத்ததை செய்து முடித்திருக்குமல்லவா? இது எப்படி சாத்தியமாகும்.

அப்படி பேய்,ஆவி இருந்ததெனில் நமக்கு முன் இறந்தவர்கள் அவர்களின் நிலை என்ன என்பதை யாரின் உடலினுள் சென்று நமக்கு தெரிவித்திருப்பார்களல்லவா? இது எப்படி சாத்தியமாகும்?

இவ்வளவு ஏன்? மனிதரில் மிகச்சிறந்த நம் நபி(ஸல்) அவர்களுக்கு கூட அல்லாஹ் அந்த வாய்ப்பளிக்கவில்லை. நாம் சொல்லும் சலாமை வானவர்கள் தான் எத்திவைப்பார்களே தவிர அவரின் ஆவிக்கு நேரடியாக போய் சேராது.
இதைவிட நமக்கு ஒரு ஆதாரம் தேவை இல்லை.

✒அந்த பெண் இரவில் கத்துவது ஹிஸ்டீரியா போன்ற நரம்பு நோயினால் அல்லது ஏதாவது மனபாதிப்பினாலான மனநோயினால் இருக்கும். இதற்கு நரம்பியல் நிபுணர் அல்லது மனோதத்துவ நிபுணரிடம் சென்று வைத்தியம் பார்த்தால் போதுமானது. பேயிற்கும் இதற்கும் ஒரு சம்பந்தம் கிடையாது.

இது போன்ற விஷயங்கள் பலர் தன்னுடைய சுயலாபத்திற்காக பரப்பி விடுகின்றனர். இன்னும் சிலர் சில சமூக சீர்கேடுகள் செய்வதற்காகவும், தன்னுடைய வருமானத்தை பெருக்கவும் இப்படியான இழி செயலளில் ஈடுபடுகின்றனர். சிலருக்கு தன்னுடைய ஆழ்மனது கற்பனைகளின் மூலமும் இப்படி நடக்கிறது. இன்னும் சிலர் ஏதாவது ஒரு காரணத்திற்காக பேய் பிடித்ததாக நடிக்கின்றனர்.

எனவே,இதுபோன்ற விஷயங்களை நம்பிக்கை கொள்ளாது தூய்மையான இஸ்லாமியர்களாக வாழ்வோம். இன்ஷா அல்லாஹ்

📚📖ஆதாரங்கள்:

📙உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதைக் குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

திருக்குர்ஆன் 39:42

📙உங்களில் யாரேனும் படுக்கைக்குச் சென்றால், ‘என் இறைவா! உன் திருப்பெயராலேயே திரும்பவும் எழுவேன். (உறக்கத்தில்) எனது உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அற்கு நீ மன்னித்து அருள் புரிந்திடு! அதை நீ திரும்ப அனுப்பினால் உனது நல்லடியார்களை நீ பாதுகாப்பது போல் எனது உயிரையும் நீ பாதுகாத்து விடு’ என்று கூறட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்கள் : புகாரி   6320, 7393 முஸ்லிம் 5257

📙முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும்போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

திருக்குர்ஆன் 23:99,100

📙உங்களில் எவரேனும் மரணித்து விட்டால் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்தில் உள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக அவர் இருப்பின் நரகத்திலுள்ள அவரது இடம் அவருக்கு எடுத்துக் காண்பிக்கப்படும். கியாமத் நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடமாகும் என்றும் அவரிடம் கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூற்கள் : புகாரி 1338, 1374, 1379, 6515, முஸ்லிம் 5505

📙பூமியில் சுற்றிக் கொண்டிருக்கக் கூடிய சில வானவர்கள் உள்ளனர். என் சமுதாயத்தினரின் ஸலாமை அவர்கள் என்னிடம் சேர்ப்பிக்கிறார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்கள் : நஸாயீ, தாரிமி

📙ஆதமுடைய மக்களிடம் ஷைத்தானுக்கு ஒரு ஆதிக்கம் உண்டு. அது போலவே வானவருக்கும் ஒரு ஆதிக்கம் உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)

நூல் திர்மிதீ

📙இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது இவர்கள் விழித்துக் கொள்வார்கள்.

திருக்குர்ஆன் 8:201

📙’உங்களில் ஒருவர் மரணித்து அடக்கம் செய்யப்பட்டால் அவரிடம் கரு நிறமான நீல நிறக் கண்களுடைய இரண்டு மலக்குகள் வருவார்கள். அவர்கள் முன்கர் என்றும் நகீர் என்றும் சொல்லப்படுவார்கள்’ அவர்கள் நபீ (ஸல்) அவர்களைக் குறித்து அவனிடத்தில் ‘இந்த மனிதரைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்’ என்று கேட்பார்கள். அவன் (மூமினாக இருந்தால்) ‘அவர்கள் அல்லாஹ்வுடைய அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள் என்று சாட்சி கூறுகிறேன்’ என்று கூறுவான். அப்பொழுது அந்த மலக்குகள் அவனை நோக்கி நீ இவ்வாறு கூறுவாய் என்பதை ஏற்கெனவே நாம் அறிந்திருந்தோம் என்று கூறுவார்கள். அதனைத் தொடர்ந்து அவனுடைய கப்ரு எழுபது முழங்கள் விசாலமாக்கப்படும். பின்னர் அந்த கப்ரு ஒளியேற்றப்பட்டு பிரகாசமாக்கப்படும். அவனை நோக்கி ‘நீ உறங்குவாயாக!’ என்று கூறுவார்கள். அவனோ அவர்களை நோக்கி என்னுடைய குடும்பத்திடம் நான் சென்று (எனக்குக் கிடைத்துள்ள இந்த நற்பாக்கியத்தை) அறிவித்து விட்டு வர என்னை விட்டு விடுங்கள் என்ற கூறுவான். அப்பொழுது அந்த மலக்குகள் ‘மிக விருப்பத்துக்குரிய ஒருவரேயன்றி வேறெவரும் எழுப்பாதவுள்ள மணமகனின் உறக்கமாக நீ உறங்குவாயாக!’ என்று கூறுவார்கள். அன்று முதல் மறுமை நாள் வரை அவன் உறங்கிக் கொண்டே இருப்பான்.

(அந்த இரு வானவர்கள்) முனாபிக் ஒருவனிடம் கேள்வி கேட்கும் போது, ‘மக்கள் ஏதேதோ சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஆனால் (இப்பொழுது எதுவும்) எனக்குத் தெரியாது’ என்று கூறுவான். அப்பொழுது அந்த மலக்குகள் அவனை நோக்கி ‘நீ இவ்வாறே பதிலளிப்பாய் என்பதை ஏற்கனவே நாம் அறிந்து வைத்திருந்தோம்’ என்று கூறுவார்கள். அதனைத் தொடர்ந்து அவனை நெருக்குமாறு பூமிக்கு உத்தரவிடப்படும். அவனுடைய (வலது இடது) விலா எலும்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கொள்ளுமளவு அது அவனை நெருக்கும். அவனை அந்த இடத்திலிருந்து அல்லாஹ் எழுப்புகின்ற நாள்வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபீ (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ஆதாரம்: திர்மிதி: 991)

***********************************

🍒Question no:149🍒

   Oru sahabi kulikkumbodhu kanthrishti pattu  avarkku udal nalam sariyillaamal ponadhaga hadees ulladhu? idhai vaithu paarkumbodhu kanthrishti unmaydhaney? Vilakkavum.

🍒கேள்வி எண்:149🍒

   ஒருவர் ஒரு சஹாபி குளிப்பதை பார்த்ததால் அவருக்கு கண்திருஷ்டி பட்டுவிட்டதாக ஒரு ஆலிம் உரையில் கேட்டேன்,அப்பொழுது அது உண்மைதானா?

🌾பதில்🌾

    போன கேள்வியில் சூனியம் எப்படிப்பட்டது என்பதை விளக்கினோம். இருப்பினும் இந்த குறிப்பிட்ட நிகழ்வுக்கு உரிய பதிலை எதிர்பார்க்கிறீர்கள்.

இதன் விளக்கத்தை பார்ப்போம்.
எப்படிப்பட்ட ஹதீஸை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என சுருக்கமாக பார்ப்போம்.
1) குரானில் உள்ள விஷயங்கள் அப்படியே ஹதீஸில் இருந்தால் நாம் அதை எந்த மறுப்பும் இன்றி ஏற்க வேண்டும்.
2) குரானில் கூறப்படாத சில விஷயங்கள் நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய,சொன்ன,அங்கீகரித்த விஷயங்களை ஏற்க வேண்டும்.
இந்த ஹதீஸ்கள் குரானுக்கு எதிராக இல்லையெனில் நாம் அறிவிப்பாளர்களின் உண்மை நிலையை வைத்து அப்படியே ஏற்கலாம்.

ஆனால்,ஹதீஸ்கள் யார் வழியாக வந்தாலும் குரானுக்கு எதிரான ஒரு விஷயமாக அது இருக்குமானால் அதை நாம் ஏற்கக்கூடாது.
ஏனெனில் குரானில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் அல்லாஹ்விடமிருந்து வந்த நேரடியான சத்திய வார்த்தைகள். இதை பற்றிய ஞானம் அல்லாஹ்விடத்தில் மட்டுமே உள்ளது.
 
இதன் அடிப்படையில் அல்லாஹ் குரானில் சூனியம் பற்றியும்,கண்திருஷ்டி பற்றியும் தெளிவாகக் கூறியுள்ளான்.

அல்லாஹ்வை தவிர யாருக்கும் எந்த சக்தியும் கிடையாது எனவும்,சூனிய காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள் எனவும்,அல்லாஹ் தான் விதித்ததை தவிர யாருக்கும் ஒன்றும் நடக்காது என சந்தேகத்திற்கு இடம் இன்றி கூறியுள்ளான்.
எனவே,சூனியம் என்பது இருந்தாலும் இதற்கு ஒரு சக்தியும் இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அது ஒரு தந்திரக்கலை தவிர எந்த மந்திர சக்தியும் இல்லை.

அதுபோல் தான்,கண்திருஷ்டி என்ற பல ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானதாக இருந்தாலும், அதன் மூலம் பாதிப்பு ஏற்படும் என்று நம்பிவிட்டால்., அல்லாஹ்விற்கு மட்டுமே இயலும் ஒரு சக்தி ஒருவரின் கண் செய்துவிட்டதாகத்தான் அர்த்தம்.
இது எப்படி சாத்தியமாகும்?
இது குரானின் வசனங்களுக்கு எதிராக அமைந்துவிடும்.
ஷைத்தானின் தீண்டுதலால் ஏற்படும் பாதிப்பிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு கோர அல்லாஹ் பல இடங்களிலும் கூறியுள்ளான். ஒரு மனிதனின் கண்திருஷ்டிக்கு பாதுகாப்பு தேடுங்கள் என எந்த ஒரு வசனத்திலும் இடம் பெறவில்லை. பொறாமைக் காரனின் பொறாமையிலிருந்து பாதுகாப்பு அல்லாஹ்விடம் கேட்க வேண்டும், இது குரான் வசனத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் விளக்கம் யாதெனில் அவன் பொறாமை காரணமாக கைகளால்,நாவினால் செய்யும் தீங்கு ஆகும் தவிர அவன் பார்ப்பதின் மூலம் ஒன்றும் ஆகிவிடாது என்பதை விளங்கி கொள்ள வேண்டும். நம்முடைய பலவீனமான செய்கைகளில் தான் ஷைத்தான் எளிதாக ஊடுறுவி ஈமானை தகர்க்க செய்வான்.

ஒரு சஹாபி குளிப்பதை பார்ப்பதால் ஏற்பட்ட உடல்நல குறைவு மற்றும் கண்திருஷ்டி பட்டால் குளித்து அந்த நீரைக் கொண்டு கண்பட்ட இடத்தை கழுவவது போன்ற ஹதீஸ்கள் இருக்கிறது என்றாலும்,
“குளித்து விட்டு அந்த அசுத்த நீரைக் கொண்டு கண்பட்ட இடத்தை கழுவினால் திருஷ்டி நீங்கிவிடும்” போன்ற செய்திகள் நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பார்களா???

இப்படி சந்தேகத்திற்குரிய செய்தியை சொல்லியிருக்கக் கூடுமா???என்று சிந்தித்து பார்த்தாலே நமக்கு உண்மை விளங்கிவிடும். நபி(ஸல்) அவர்கள் சொன்ன  விஷயங்களை நாம் கேட்கும்போது சந்தேகம் ஏற்படாது. இப்படியான அல்லாஹ்விற்கு இணையான சக்தி ஒரு சாதாரண மனிதக் கண்ணுக்கு செய்யமுடியுமா? மற்றும் குளித்த அசுத்த நீரினால் கழுவச் சொல்லி இருப்பார்களா? என்று பகுத்தறிய வேண்டும்.

📚📖ஆதாரங்கள்

📙قُل لَّن يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا ۚ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ  ﴿9:51﴾
9:51. “ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!

📙
وَلِلَّهِ غَيْبُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَإِلَيْهِ يُرْجَعُ الْأَمْرُ كُلُّهُ فَاعْبُدْهُ وَتَوَكَّلْ عَلَيْهِ ۚ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ  ﴿11:123﴾
11:123. வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைபொருள்கள் (இரகசியங்கள் பற்றிய ஞானம்) அல்லாஹ்வுக்கே உரியது; அவனிடமே எல்லாக் கருமங்களும் (முடிவு காண) மீளும். ஆகவே அவனையே வணங்குங்கள்; அவன் மீதே (பரஞ்சாட்டி) உறுதியான நம்பிக்கை வையுங்கள் – நீங்கள் செய்பவை குறித்து உம் இறைவன் பராமுகமாக இல்லை.

📙இன்னும் அவர்கள் சொல்லும் போது,
என் பெயரில் ஒரு செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் ஒத்துக்கொள்ளுமானால் இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் அதற்கு பணியுமானால் (அதாவது நமது உணர்வுகள்), அதோடு அந்த செய்தி உங்களுக்கு (நடைமுறை வாழ்க்கைக்கு) நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை கூறுவதில் நானே மிக தகுதியானவன். 
என் பெயரில் ஒரு செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால் இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் அதற்கு கட்டுப்படாமல் அதை விட்டு விரண்டோடுமானால் , அதோடு அந்த செய்தி உங்களுக்கு (நடைமுறை வாழ்க்கைக்கு) தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் தூரமானவன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் அபு உசைத்     நூல் அஹமத் 15478

**குறிப்பிட்ட ஒரு ஹதீஸை விளக்காமல் மீண்டும் சூனியம்,கண்திருஷ்டி பற்றியே விளக்கப்பட்டுள்ளது ஏனெனில் இதை பற்றி தெளிவாக விளங்கிக்கொண்டால் உங்களது கேள்விக்கான பதில் கிடைத்துவிடும். 🎤🎤🎤

=============================

🍒Question no:150🍒

Pengal 30 nonbu muzhuvadhuvaamaga kadaipidippadharkaaga maathirai saappittu maadhavilakkai thalli poda islathil anumadhi unda?

🍒கேள்வி எண் 150🍒

    பெண்கள் 30 நோன்பையும் முழுமையாக கடைபிடிப்பதற்காக மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு மாதவிலக்கை தள்ளிப்போட இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

☘பதில்☘

    இஸ்லாம் இயற்கையான மார்க்கம். இதில் அல்லாஹ்வும்,தூதரும் காட்டித்தந்தவைகள் மட்டும்தான் செய்ய வேண்டும். மனித முயற்சிகளை அதில் புகுத்தக்கூடாது.

மாதவிலக்கை அல்லாஹ்தான் பெண்களுக்கு ஏற்படுத்தியுள்ளான்.
எனவே, இதை தடுப்பது இஸ்லாத்திற்கு முரணானதாகும்.

அல்லாஹ் பெண்களுக்கு இயற்கையாக வழங்கியுள்ள தன்மையை மாற்றுவது அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தராது என்பதை இவர்கள் உணர வேண்டும். மாதவிடாய் என்பது அல்லாஹ் செய்த ஏற்பாடாகும். ரமளானில் சில நாட்கள் தவறி விடுவதால் ஆண்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் பெண்களுக்குக் குறைந்து விடாது. விடுபட்ட நோன்பை வேறு நாட்களில் களாச் செய்து விடும் போது புனித ரமளானில் நோன்பு நோற்ற அதே நன்மையை இவர்களும் அடைவார்கள்.

இது மார்க்கத்திற்கு முரணானது மட்டுமல்ல,உடலுக்கும் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இயற்கையான மாதச்சுற்று மாறி இது பல இடையூறுகளையும் ஏற்படுத்தும்.

அல்லாஹ் மார்க்கத்தை மிக எளிமையாக ஆக்கியுள்ளான். தன்னை வருத்தி எந்த ஒரு அமலையும் செய்ய மார்க்கம் கற்றுத்தரவில்லை. மேலும் பெண்களுக்கு நாம் குடும்பத்திற்கு செய்யும் பணிவிடையில் அல்லாஹ் பல நன்மைகள் வைத்துள்ளான். இயற்கையான முறையில் அமல்களை உளத்தூய்மையுடன் செய்தாலே அல்லாஹ் அதற்குரிய நன்மையை தருவான்

மாதவிடாயை அவனே ஏற்படுத்தி விட்டு, அந்தக் காலத்தில் நோன்பு நோற்க வேண்டாம் என்று அவனே கட்டளையிட்டு விட்டு, அவர்களின் கூலியை அவனே குறைப்பான் என்பது இறைவன் விஷயத்தில் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாததாகும்

எனவே, *மாதவிலக்கை மருந்து மாத்திரைகளால் தள்ளி போடுவது அரவே கூடாத விஷயமாகும்*

இதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.

📚📖ஆதாரங்கள்

📙
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ ۚ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ  ﴿2:185﴾
2:185. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).

📙1755. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
”இறையில்லம் கஅபாவை வலம்வருவதை ஹஜ்ஜின் கடைசி வழிபாடாக ஆக்கிக் கொள்ள வேண்டும்” என மக்கள் கட்டளையிடப்பட்டுள்ளனர். ஆயினும் மாதவிடாய்ப் பெண்களுக்கு மட்டும் அதில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. (கடைசி தவாஃபான தவாஃபுல் வதாவை மட்டும்விட்டுவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.)
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 25. ஹஜ்

📙அல்லாஹ் மனிதர்களுக்குச் சிறிதளவும் தீங்கு இழைக்க மாட்டான். மாறாக மனிதர்கள் தமக்கே தீங்கு இழைக்கின்றனர்.

அல்குர்ஆன் 10:44

📙அல்லாஹ் அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான். அது நன்மையாக இருந்தால் அதைப் பன்மடங்காகப் பெருக்குவான். தனது மகத்தான கூலியை வழங்குவான்.

அல்குர்ஆன் 4:40

📙2:233 ….எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது ….
———————————————————–

Leave a comment